சென்னை, ஆக. 18–
அடையாளம் தெரியாத பிரேதங்களை மீட்டு நல்ல முறையில் அடக்கம் செய்து மக்கள் பொது சேவை ஆற்றிய பெண் தலைமைக்காவலரை டிஜிபி சைலேந்திரபாப நேரில் அழைத்து பாராட்டினார்.
கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் ஆமினா. காவல் பணி மட்டுமல்லாது இவர் பொது சேவைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத மற்றும் யாரும் உரிமை கோராத பிரேதங்களை ( NGO ) அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பிரேதங்களின் இறுதிச் சடங்குகளை நல்ல முறையில் செய்துள்ளர். காவல் பணிகளை மேற்கொண்டு பல சிரமங்களுக்கு இடையிலும் பெண் தலைமைக்காவலர் ஆமினாவின் சமூகத் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது. காவல்துறைக்கு இவரது செயல் பொதுமக்களிடையே நன்மதிப்பை
உயர்த்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆமினாவின் சிறந்த மக்கள் சேவையை பாராட்டிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவரை நேரில் அழைத்து பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்.